ஐபிஎல் 2024 போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் கடந்த 14-ஆம் தேதி மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதியது. இந்த போட்டியின் போது களமிறங்கிய எம்எஸ் தோனி 4 பந்துகளை மட்டும் எதிர்கொள்ளும் வாய்ப்பை பெற்றார். அப்போது அவர் 6,6,6, என ஹாட்ரிக் சிக்சர்களை பறக்க விட்டார். தோனி விளையாடி முடித்ததும் பெவிலியன் நோக்கி படிக்கட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது படிக்கட்டில் பந்து ஒன்று கிடந்தது. அந்தப் பந்தை தோனி எடுத்து  ஒரு சிறுமிக்கு பரிசாக கொடுத்தார். இந்நிலையில் தோனியிடமிருந்து பந்தை பரிசாக பெற்ற சிறுமி தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த சிறுமியின் பெயர் மெஹர். அந்த சிறுமி நானும் இந்தியாவுக்காக ஒருநாள் விளையாடுவேன். அப்போது என்னுடைய கனவை நிஜமாக்கி தோனி போன்று நானும் இந்தப் பந்தை என்னைப் போன்ற ஒருவருக்கு பரிசாக கொடுப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.