ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் கடந்த மாதம் 22-ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ மற்றும் சென்னை அணிகள் மோதிய நிலையில் லக்னோ அணி வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிவடைந்த பிறகு லக்னோ அணியை சேர்ந்த நிக்கோலஸ் பூரன் எம்.எஸ் தோனி குறித்து தன் மனதில் இருந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது, எங்கள் அணியில் ஒரு காலத்தில் பிரையன் லாரா புகழ்பெற்று இருந்தார்.

நாங்கள் அனைவரும் அவருடைய ரசிகர்கள். அவரைப் போன்று தற்போது எம்.எஸ். தோனி இந்தியாவின் நேஷனல் ஹீரோவாக இருக்கிறார். அனைத்து சீசன்களிலும் எம்.எஸ் தோனி ஒவ்வொரு முறையும் பேட்டை எடுத்துக்கொண்டு வரும்போது மைதானத்தில் மஞ்சள் கடல் காத்திருக்கிறது. இதைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. நாங்கள் பிரையன் லாராவின் காலத்தில் விளையாடவில்லை. அப்போது அவருக்கு ஏராளமான தீவிர ரசிகர்கள் இருந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு காட்சியை தற்போது இங்கே காண்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எம்.எஸ் தோனியுடன் ஒரே மைதானத்தில் விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் இந்த தருணங்களை என்னுடைய குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்வேன் என்று கூறினார்.