தமிழகத்தில் மாதம் தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு மின்விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று மதுரை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி மதுரையில் திருமங்கலம் ரயில்வே, பீடர் ரோடு, வடகரை, ஆனந்தா தியேட்டர் பகுதி, கீழபள்ளி வாசல் தெரு, கற்பக நகர், ஆறுமுக நகர் வடபகுதி, விமான நிலைய ரோடு, பயோனியர் காலனி, பாண்டியன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இதேபோன்று  விழுப்புரம் மாவட்டத்தில் வளவனூர் துணை மின் நிலையம் மற்றும் திருச்சிற்றம்பலம் துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் 11 மணி வரை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் வளவனூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அய்யனார் கோவில், புத்து, கள்ளிக்குளம், காந்திநகர், எம்ஜிஆர் நகர், பக்கமேடு, மோச்டகுளம், உப்பு முத்தம்பாளையம், சிறுவந்தாடு, தாதம் பாளையம், புதுப்பாளையம், அற்பிசம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் ரத்து செய்யப்படும். மேலும் திருச்சிற்றம்பலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான ஆப்பிரம்ட்டு, வில்வநாதம், கொடூர், நெசல், ராய புதுப்பாக்கம் மற்றும் துருவை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் ரத்து செய்யப்படும்.