இந்தியாவில் பிட்புல், ராட்வீலர், புல்டாக் மற்றும் டெரியர் உள்ளிட்ட ஆக்ரோஷ தன்மை கொண்ட வெளிநாட்டு இன நாய்களின் இறக்குமதி, இனப்பெருக்கம் மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க கோரி மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏற்கனவே வீடுகளில் வளர்க்கப்படும் வெளிநாட்டு இன நாய்களுக்கு கருத்தடை செய்யுமாறு கால்நடை வளர்ப்பு ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.