கர்ணூல் மாவட்டம் கோசிகி மண்டலத்தில் கசாப்பு கடைக்காரரின் தந்தையால் மூன்று வயது சிறுமி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து போலீசார் நடத்திய விசாரணையில், ஜம்போ புரத்தில் வசித்து வரும் குடிக்கு அடிமையான சாந்தி குமார், மனைவி பூர்ணா உடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை தாயின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த மகள் மூன்று வயது ஜமுனாவை சாந்தி குமார் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.