மாவுகள் கெட்டு போகாமல் இருப்பதற்கான சில எளிய டிப்ஸ்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

நம் வீட்டில் எப்போதுமே மாவுப்பொருட்களை ஸ்டாக் வைத்திருப்போம். இதில் சில நேரம் பூச்சிகள் வந்துவிடுகின்றன. இல்லையெனில் மாவு கேட்டு போய்விடுகின்றது. இப்போது மாவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கான சில டிப்ஸ்களை இப்போது பார்க்கலாம்.

காற்று புகாத பாத்திரம்:

காற்று புகாத பாத்திரத்தில் அதாவது இறுக்கமான மூடிக்கொண்ட உலோகப் பாத்திரங்களில் மாவை போட்டு மூடி வைக்கவேண்டும். மூடி இறுக்கமாக இருப்பதால் பூச்சிகள் எளிதில் பாத்திரத்திற்குள் நுழைய முடியாது. இல்லையெனில் அவற்றை பிளாஸ்டிக் பைகளில் போட்டு குளிரான பகுதிகளில் பத்திரப்படுத்தி வைக்கலாம்.

மஞ்சள் அல்லது இஞ்சி:

மஞ்சள் அல்லது இஞ்சி ஆகியவற்றை மாவு வைத்திருக்கும் பாத்திரத்தில் போட்டால் பூச்சிகள் வராது தடுக்க முடியும்.

பிரியாணி இலைகள்:

பூச்சிகள் விழாமல் இருப்பதற்கு மாவு பாத்திரத்தில் பிரியாணி இலைகளை போட்டு வைக்கலாம். அல்லது மாவு வைத்திருக்கும் பாத்திரத்தை சுற்றிலும் கிராம்பு பொடியை தூவினால் பூச்சிகள் அண்டாமல் இருக்கும்.