டாஸ்மாக் கடைகளை அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி திறந்து வைக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையில் இரவு 10 மணிக்கு மேல் மது விற்ற குற்றத்திற்காக 4 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது தமிழகத்தில் மதியம் 12 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மது விற்க அனுமதி உண்டு. இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.