முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழல்வாதி என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த கருத்துக்கு அதிமுக கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசியலில் அனுபவம் இல்லாத ஒரு குழந்தை அண்ணாமலையின் பேச்சுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் அம்மாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது’ என சசிகலா அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணாமலையின் சிறுபிள்ளைத்தனமான பேச்சுக்களால் அவர் சார்ந்து இருக்கும் இயக்கத்திற்கே கெடுதல் ஏற்படும்’ என தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.