அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகம், தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தியது. இந்த சோதனை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் அமைச்சரது அறைக்கு சென்று தேடுதல் நடத்த வேண்டிய தேவை என்ன ஏற்பட்டது என்று தெரியவில்லை.

தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடத்துவோம் என்று காட்டவோ அல்லது அதனை காட்டி மிரட்டவோ விரும்புகிறார்களா என தெரியவில்லை. இவை எல்லாம் விசாரணை அமைப்பானது அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுவதையே எடுத்துக்காட்டுகின்றது. பாஜகவின் மிரட்டல் அரசியல் திமுக விட செல்லுபடி ஆகாது என்று தெரிவித்துள்ளார்.