நெல்லையில் பட்டியல் இனத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலரை கஞ்சா போதையில் ஆறு பேர் கொண்ட மர்மகும்பல் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கி சித்திரவதை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஜாதிய தீண்டாமை தலைவிரித்து ஆடுவதாகவும் இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.