திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி தூப்குரி இடைத்தேர்தலை முன்னிட்டு நேற்று நடந்த பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம். தேர்தலில் வெற்றி பெற்றால் சிலிண்டர் ஒன்றின் விலை 3000 ரூபாயாக உயர்த்தப்படும். ஆனால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும். இது உங்களுக்கு நாங்கள் அளிக்கும் வாக்குறுதி. எங்கள் வாக்குறுதிகளை நாங்கள் மறக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.