மாலை 5 மணிக்கு வழங்கப்படும் இலவச மசாலா தோசை மற்றும் பில்டர் காபி தான் இஸ்ரோ விஞ்ஞானிகளின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் அந்த ரகசியம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். சந்திரயான் 3, ஆதித்யா எல் 1 என தொடர் வெற்றிகளுக்கு பின்னால் ஒரு ரகசியம் இருப்பதாக அவர் கூறினார்.

கூடுதல் மணி நேரம் செலவழிப்பதற்காக விஞ்ஞானிகள் சிறப்பு சலுகைகள் அல்லது நிதி சலுகைகள் எதையும் பெறவில்லை. ஆனால் அவர்களை ஊக்கப்படுத்தியது எது தெரியுமா? தினமும் மாலை 5 மணிக்கு மசாலா தோசை மற்றும் பில்ட்டர் காபி இலவசமாக வழங்கப்படுகிறது. இதுவே விஞ்ஞானிகளின் வெற்றி சூத்திரம் என்று தெரிவித்துள்ளார்.