லாகூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, கேப்டன் சல்மான் ஆகா (76 ரன்கள்) மற்றும் உஸ்மான் கான் (53 ரன்கள்) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 198 ரன்கள் குவித்தது. இது டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
சவாலான இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி, 15.4 ஓவர்களில் வெறும் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தப் போட்டியின் போது ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன், பாகிஸ்தான் ஸ்பின்னர் உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு முறையை (Bowling Action) கடுமையாக விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உஸ்மான் தாரிக் பந்தை முறையாக வீசாமல் எறிகிறார் (Throwing) என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் கிரீன் மைதானத்திலேயே சைகை காட்டினார்.
Cameron Green crying over the bowling action of Usman Tariq. 🤣
– The so called most expensive player of IPL.
— Salman. (@TsMeSalman) January 31, 2026
அவரது விசித்திரமான பந்துவீச்சு முறையில் ஆட்டமிழந்த கேமரூன் கிரீன், மிகுந்த அதிருப்தியுடனேயே வெளியேறினார். இருப்பினும், பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது மற்றும் ஷதாப் கான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் தோல்வியை உறுதி செய்தனர். 2018-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
