தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாலும் உள்ளது. இவர் தொடர்ந்து திரைப்படம், குடும்பம் என பிசியாக இருக்கும் நிலையில் கடைசியாக மண்ணாகட்டி since 1960, அன்னபூரணி போன்ற படங்களில் நடித்துள்ளார். இதில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி அன்று அன்னபூரணி படம் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. நயன்தாராவின் 75 ஆவது திரைப்படமான இதில் ஜெய், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படி புகழும் உச்சத்தில் இருக்கும் நயன்தாரா நேற்று கலைஞர் 100 விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் இவர் மட்டுமின்றி ரஜினிகாந்த் ,கமலஹாசன் உள்ளிட்ட பல துறை பிரபலங்களும் வருகை தந்ததாக தகவல் வெளியானது .கலைஞர் நிகழ்வில் கலந்து கொண்ட நயன்தாரா கேப்டனுக்கு இதுவரையிலும் அஞ்சலி செலுத்தவில்லை. மேலும் அவர் நினைவிடத்திற்குக்கும் செல்லவில்லை என்று ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளார். மேலும் சினிமாவில் இருக்கும் பல முன்னணி பிரபலங்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் கேப்டனுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ஆனால் நயன்தாரா இதுவரையிலும் பார்க்க சல்லாத விஷயம் அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.