மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த ஒரு விபத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் கவனக்குறைவால் வண்டி ஓட்டுதல் போன்றவைகளால் ஏற்படும் கோரத் தாக்கத்தை காட்டுகிறது.

இந்த சம்பவத்தின் வீடியோ @Incognito_qfs என்ற X கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதில், ஒரு மோட்டார் சைக்கிள் பயணியின் ஹெல்மெட்டில் பொருத்தப்பட்ட முக-கேமரா மூலம், நேரடியாகச் சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், ஒருவர் ஹார்லி டேவிட்சன் பைக்கில் பயணிக்கிறார். இறக்குமதி செய்யப்பட்ட பைக்குகளின் உதிரிபாகங்களைப் பெறுவது எவ்வளவு சிரமமானது என்பதைப் பற்றிப் பேசிக் கொண்டே சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது  திடீரென ஒரு காரின் பின்னால் இருந்து வேகமாக வந்த மற்றொரு பைக்கர் நேராக அவர் மீது மோதி விடுகிறார்.

 

இந்த விபத்திற்கு அந்த கார் ஒரு முக்கியக் காரணமாக இருந்தாலும், நெட்டிசன்கள் விபத்தில் தொடர்புடைய இருவரையும் குற்றவாளிகளாகவே பார்க்கின்றனர்.

இந்த சம்பவம் அதிர்ச்சியூட்டும் வகையிலிருந்தாலும், பெரும்பாலான பார்வையாளர்கள் அதே நேரத்தில் நிம்மதியாகக் கூட உள்ளனர். காரணம் – இதில் எந்தவொரு பெரிய காயமும் ஏற்படவில்லை என்பது. இருவரும் உயிர்தப்பியது ஒரு அதிர்ஷ்டமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்