சீனாவில் உள்ள அன்ஹூய் மாகாணத்தில் சன் ஹாங்சியா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவருக்கு கணவர் 2014 ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் திடீரென கோமாவுக்கு சென்று விட்டார். இதனால் கடந்த 10 வருடங்களாக கோமாவில் இருந்த அவருடைய கணவரை ஹாங்சியா மிகவும் அக்கறையாக கவனித்துக் கொண்டார். தன்னுடைய கணவர் நிச்சயம் குணமடைவார் என்ற நம்பிக்கையில் கடந்த 10 வருடங்களாக அவரை மிகுந்த பொறுப்புடன் அக்கறையாகவும் அவர் கவனித்து வந்தார்.

அவரைப் பார்த்துக் கொள்ள குழந்தைகளும் உதவி செய்தனர். இந்நிலையில் தற்போது ஹாங்சியாவின் கணவர் 10 வருடங்களுக்கு பிறகு கோமாவிலிருந்து மீண்டுள்ளார். இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த ஹாங்கியா கடந்த காலங்களில் நடந்த அனைத்து விஷயங்களையும் அவருக்கு நெகிழ்ச்சியுடன் கூறினார். மேலும் உண்மை காதலால் 10 வருடங்களுக்குப் பிறகு கோமோவில் இருந்த தன் கணவரை மனைவி மீட்டது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.