அரக்கோணத்தில் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் பாஜகவை எதிர்க்க துணிவு இல்லாத நபராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார் என்று பேசி வருகிறார்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசியுள்ள ஈ பி எஸ், எதிர்க்கட்சியாக இருக்கும் நாங்கள் எப்படி மோடியை எதிர்ப்பது, ஆளுங்கட்சியாக இருந்தால் எதிர்ப்பேன் என்று பேசி உள்ளார். பழனிச்சாமியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள். இவரின் இந்த பேச்சு அதிமுக மற்றும் பாஜக கள்ளக் கூட்டணியில் உள்ளார்கள் என முதல்வர் ஸ்டாலின் பேசி வருவதை உண்மையாக்குவது போல உள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.