பிரேசிலின் பாகபால் நகரில் 12 வயது சிறுமி ரைசா திடீரென மாயமாகி விட்டதாக தகவல் வெளியாகியதைத் தொடர்ந்து, நிகழ்விடம் சென்ற தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் செய்தியை நேரலையில் விளக்கிக் கொண்டிருந்தபோதே அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பத்திரிகையாளர் லெனில்டோ பிராசாவ் என்றவர், மியரிம் ஆற்றங்கரையில் நேரலை செய்தி அளிக்கும்போது, தன்னுடைய காலடியில் ஏதோ இருப்பதை உணர்ந்தார். உடனே பார்வையாளர்களிடம், “கீழே ஏதோ இருக்கிறது போலிருக்கிறது… எனக்கு பயமாக இருக்கிறது…” என்று கூறி தயங்கியதுடன், அது மீனா அல்லது அந்த மாயமான குழந்தையா என்ற சந்தேகத்திலிருந்தான். அந்த இடத்திலேயே, மீட்புப் படையினர் சிறுமி ரைசாவின் உடலை மீட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற உடற்கூறு பரிசோதனையில், சிறுமி தன்னுடைய நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்றபோது தவறி மூழ்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் வன்முறை அல்லது குற்றச்செயல் எதுவும் நடக்கவில்லை என மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சி சம்பவம் பிரேசில் மக்களிடையே பெரும் கவலையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேரலை செய்திக்காலத்திலேயே இவ்வாறு துயரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்தது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிறுமியின் குடும்பத்தினர் தற்போது அந்த சோகத்தில் இருக்கிறார்கள்.
Brazilian journalist discovers body of missing 12yo girl while filming report about her disappearance pic.twitter.com/73ygG2tGYh
— RT (@RT_com) July 21, 2025
