தமிழகத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வரை ஒரு கிலோ மல்லி 750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

முல்லைப் பூ 500 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிச்சிப்பூ 800 ரூபாய், சேவல் கொண்டை பூ 80 ரூபாய், அரளிப்பூ 350 ரூபாய் மற்றும் கனகாம்பரம் 700 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. இதனைப் போலவே சாமந்தி மற்றும் சம்பங்கி உள்ளிட்ட பூக்களின் விலையும் இன்று சற்று அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.