ஆப்பிள் பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஐபோன், ஐபாட், ஆப்பிள் வாட்ச் மற்றும் மேக் புக் மற்றும் சஃபாரி பிரௌசர் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக இந்திய அரசின் இணைய பாதுகாப்பு நிறுவனமான கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் இந்தியா  சமீபத்தில் தெரிவித்தது.

இதனால் பயனர்களின் தகவல்களை ஹேக்கர்கள் எளிதாக சேகரிக்க முடியும் என்று எச்சரித்துள்ளது. எனவே பயனர்கள் தங்கள் தரவுகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.