நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக வழங்கப்பட்ட வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 14 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் 15 வது தவணை பணம் விரைவில் விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்குள் இந்த பணம் வந்து சேரும் என தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசிடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.