கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து பெங்களூருவில் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ள முழு அடைப்புக்கு ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் தனியார் பள்ளிகள் சங்கம் உட்பட 50-க்கும் மேலான சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே கர்நாடகாவில் நாளை போராட்டம் பிடிக்கும் என தெரிகிறது.