ஆன்லைன் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் போது கட்டணத்தை சரிபார்க்க ஓடிபி வசதியை பயன்படுத்தி வருகின்றோம். இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் இந்த கொள்கையை பின்பற்றி வருகின்றன. இருந்தாலும் இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை சரி பார்ப்பதற்கு மற்றொரு புதிய வழிமுறையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

அதாவது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறையில் வரும் மாற்றங்களுக்கு ஏற்ப இந்த வகையான பண பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தில் புதிய முறையை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.