தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் அதற்கான பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதாவது வீடு வீடாக ஊழியர்கள் சென்று ரேஷன் கார்டு மற்றும் பிற அரசு அடையாள சான்றிதழ்களை சரி செய்து வருகிறார்கள்.

மாநிலத்தில் உள்ள தகுதி உள்ள வெள்ளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே 500 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் மொத்தம் 90 லட்சம் வெள்ளை ரேஷன் கார்டுகள் இருக்கும் நிலையில் 64 லட்சம் அட்டைதாரர்களுக்கு 500 ரூபாய்க்கு சிலிண்டர் இணைப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.