ஆண்டிபயோட்டிக் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில் மத்திய சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி ஆண்டிபயாடிக் வழங்குவதற்கான காரணங்கள் மற்றும் வழிமுறைகளை மருந்து சீட்டில் எழுத வேண்டும். மருந்து சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. ஆண்டிபயாட்டிக் பயன்பாடு அதிகமானால் பக்க விளைவுகள் ஏற்படும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.