ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புல்லம்பேட்டையில் அரசு பேருந்து மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். திருப்பதியில் இருந்து கடப்பா சென்ற அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்தில் மேலும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..