மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில்  ஆழ்த்தி  உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தெயி சமூகத்தை சேர்ந்தவர்கள் நிர்வாணமாக சாலையில் இழுத்துச் சென்றுள்ளனர்

மேலும் மணிப்பூரில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் இருக்கும் தமிழர்களின் நிலை என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள அமைச்சர் தலைமையில் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளடங்கிய தமிழக குழு ஒன்று மணிப்பூருக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழர்களின் நிலை பற்றி மணிப்பூர் மாநில அரசிடம் பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.