தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் கன மழை காரணமாக சாலைகளில்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் பழுது ஆகும் நிலை உருவாகியுள்ளது. இதில் அதிகம் விலை உயர்ந்த கார் வைத்திருப்பவர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.

அவ்வகையில் விஷ்ணு பரத்வாஜா என்பவர் தனது BMW  கார் பழுதானதால் அதை சர்வீஸ் செய்ய விட்டுவிட்டு வாங்க சென்றுள்ளார். அப்போது அவரிடம் பழுது நீக்க கட்டணமாக 15 லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கிருஷ்ணகுமார் என்பவர் தனது Audi காரை பழுது நீக்கி வாங்க சென்றபோது அவரிடம் 18.6 லட்சம் ரூபாய் கட்டணமாக கொடுத்துள்ளார்.