
தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட நிலையில் இன்று முதல் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
இந்நிலையில் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பெறுவதற்கு ஆதார் எண், குடும்ப அட்டை எண், செல்போன் எண் , வங்கி கணக்கு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் இருக்க வேண்டும். இதுவரை வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் கூட்டுறவு வங்கியில் உடனே கணக்கு தொடங்கவும். புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு உதவி தொகை கிடைக்காது என்றும் தமிழக அரசு தெளிவாக அறிவித்துள்ளது.