மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில்  ஆழ்த்தி  உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தெயி சமூகத்தை சேர்ந்தவர்கள் நிர்வாணமாக சாலையில் இழுத்துச் சென்றுள்ளனர். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “மணிப்பூரில் நடந்த பெண்கள் மீதான வன்கொடுமை பார்த்து எனது இதயம் நொறுங்கியது. இது போன்ற வெறுப்புணர்வு மனிதகுலத்தின் ஆன்மாவை அடியோடு சிதைத்து விடும். அனைவரது மனசாட்சியும் எங்கே போனது. மக்கள் இணைந்து மணிப்பூரில்  நடந்த இந்த கொடுமையை எதிர்க்க வேண்டும். இச்சம்பவம்  தொடர்பாக மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுத்து அமைதியை நிலைநாட்ட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.