இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இதில் அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டு அப்டேட்களை நாம் ஆன்லைன் மூலமாக வீட்டிலிருந்து செய்து கொள்ளலாம். அதாவது புகைப்படம் மற்றும் மொபைல் எண் மாற்றுதல் போன்ற மாற்றங்களை கட்டாயம் இ சேவை மையம் மூலம் மட்டுமே செய்ய முடியும். இதில் புகைப்படத்தை மாற்றுவதற்கு என்ற இணையதளத்தில் ஆதார் அப்டேட் https://uidai.gov.in என்ற விருப்பத்தை தேர்வு செய்து அதில் வரும் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.

அதன் பிறகு விண்ணப்பத்தை அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்தில் சமர்ப்பித்து உங்களது பயோமெட்ரிக் விவரங்களை சரிபார்த்து விவரங்களை புதுப்பித்து விடுவார்கள். இதனைத் தொடர்ந்து ஆதார் கார்டில் உங்களது மொபைல் எண் தான் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் கட்டாயம் சரிபார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். ஆதாரில் ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் எண்களை இணைத்து அதன் மூலம் பல மோசடிகள் நடைபெறுவதால் tafcop.dgtelecom.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று உங்களுடைய ஆதரவில் எத்தனை மொபைல் எண்கள் இணைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் எளிதில் தெரிந்து கொள்ளலாம்.