ரயிலில் வளர்ப்பு ஆட்டுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்து பெண் ஒருவர் பயணித்த சம்பவம் வைரலாகி வருகிறது. இது தொடர்பான வீடியோவில், வட மாநிலத்தில் செல்லும் ரயில் ஒன்றில், பெண் ஒருவர் ரயிலில் ஆட்டுக்குட்டியுடன் பயணிக்கும் வீடியோ பயணிக்கிறார். அப்போது ரயில் டிக்கெட் பரிசோதகர், அப்பெண்ணிடம் ஆட்டுக்கு டிக்கெட் இருக்கிறதா ? என கேட்கிறார். அதற்கு அப்பெண் மகிழ்ச்சியுடன், தனது கணவர், ஆட்டுக்கும் சேர்த்து 3 பேருக்கு டிக்கெட்டை எடுத்திருப்பதாக கூறி காட்டுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இதைப் பார்த்த இணையவாசிகள் பலரும் ஆடு அந்த பெண்ணுக்கு உயிரினம் அல்ல. அது அவருடைய குடும்பத்தின் ஒரு குடும்ப உறுப்பினர்.   அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. என்ன மனப்பான்மை மற்றும் பெரிய இதயம். அவருடைய புன்னகை கூறுகிறது என்று பல கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.