ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு நாளை மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போதுவரை 71,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை.

எனவே, மாறுதல் பெற விருப்பமுள்ள அனைத்து வகையான அரசுப் பள்ளி ஆசிரியர்களும் எமிஸ் இணையதளத்தின்  மூலம் விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே உடனே விண்ணப்பிங்கள் ஆசிரியர்களே.