ஏழாவது ஆசியா சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் இருக்கும் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நேற்று மோதின. இந்த போட்டியை காண முதலமைச்சர் ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஆகியோருடன் ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

போட்டியை சமன் செய்தாலே அரை இறுதி வாய்ப்பு உறுதியாகும் என்ற நோக்கில் களம் இறங்கிய பாகிஸ்தான் ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்தில் கோல் போட்டது. ஆனால் அது ஆபத்தான ஷாட் என்பதால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதையடுத்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி நான்கு கோல் போட்டது.

கடைசிவரை ஒரு கோல் கூட போட முடியாமல் தவித்த பாகிஸ்தான் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி நாளை நடைபெற இருக்கும் அரை இறுதி போட்டியில் ஜப்பானுடன் மோத இருக்கிறது.