புதுச்சேரியில் வாகன பதிவு சான்றிதழை அடமானம் வைத்து பணம் பெறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாகன பதிவு சான்றிதழை அடமானம் வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என விளம்பரங்கள் ஒட்டப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி, இது போன்று விதிகளை மீறி வாகன பதிவு சான்றிதழை அடமானம் வைத்து பணம் கொடுப்பதும், பெறுவதும் சட்டப்படி குற்றம் என தெரிவித்த அவர், அவ்வாறு அடமானம் வைத்து பணம் பெறுவர் மீதும் கொடுப்பவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.