சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு உள்ளார் என கூறினார். அவரின் குடும்பத்தாரின் ஒப்புதல் பெற்ற பிறகே இந்த அறிவிப்பை தான் வெளியிடுவதாகவும் கூறிவருகிறார். அவரது இந்த அறிவிப்பு தமிழகத்தில் மட்டுமின்றி இலங்கையிலும் சலசலப்பை உருவாக்கி இருக்கிறது. இதில் இலங்கை ராணுவம் பிரபாகரன் உயிரோடு இருப்பதை திட்டவட்டமாக மறுத்து உள்ளது.

இந்த நிலையில் பிரபாகரன் உயிரோடு இருப்பது பற்றி பேசிய கொளத்தூர் மணி, அவர் உயிருடன் இருப்பதை தங்களால் உறுதிசெய்ய இயலவில்லை என கூறியிருக்கிறார். மேலும் பழ நெடுமாறனின் அறிவிப்புக்கு பின்னணி காரணத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்