திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வெள்ள நாயகனேரி பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இந்திராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 20 வருடங்களாக ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கு காமராஜ் மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு மயங்கி விழுந்த காமராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி காமராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.