வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து பிப்.1ம் தேதி இலங்கை கடற்பகுதியில் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, டெல்டா மாவட்டங்களில் பிப்.1ம் தேதி கனமழை வெளுத்து வாங்கும் என்றும், இலங்கையையொட்டிய கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம்  எச்சரித்துள்ளது.