தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு தொகை 1,000, 1 கிலோ பச்சரிசி, 1கி சர்க்கரை வழங்க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். பலரும் நியாய விலை கடைகளில் சென்று வாங்கினார்கள். இந்த நிலையில்  பொங்கல் பரிசு 1,000-த்தை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.  இதனால் அரசு கருவூலத்திற்கு ரூ.43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பியதாகவும் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக தென் சென்னையில் 49,538பேரும், குறைந்தபட்சமாக திருப்பத்தூரில் 1,723 பேரும் பொங்கல் பரிசை வாங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் இந்த பொங்கல் பரிசு தொகையை வாங்கினாலும், ஒரு சிலர் பணம் வேண்டாம் என்று இருந்துவிட்டனர்.