காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா மறைவை தொடர்ந்து வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் பிப்ரவரி 7-ஆம் தேதி ஆகும். இதனையடுத்து வேட்பு மனு தாக்கல் மீதான பரிசீலனைப் பிப்ரவரி எட்டாம் தேதி நடைபெறுகிறது. இதில் வேட்பு மனுக்களை திரும்ப பெற பிப்ரவரி 10-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பிப்ரவரி 27-ஆம் தேதி வாக்குப்பதிவு, மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், எஸ்.ஆனந்த், ஏ.எம்.சிவ பிரசாத், மேனகா, நவநீதன் போன்றோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.