நடிகை மும்தாஜ் தனது வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை மனம் திறந்து பேசி உள்ளார். அதாவது, ஒருமுறை எனக்கு குறுக்கு மிகவும் அதிகமாக வலித்தது. அந்த வலியை என்னால் வார்த்தைகளால் கூறவே முடியவில்லை. மருத்துவ பரிசோதனையில் ஆட்டோ இம்யூன் என்ற அரியவகை நோய் எனக்கு இருப்பது தெரியவந்தது. அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.

இதனால் ஒரு முறை மிகவும் நொந்து போய் இரண்டு மணி நேரம் அழுது கொண்டே இருந்தேன். அதன் பிறகு இதிலிருந்து என்னுடைய அண்ணன் தான் என்னை வெளியே கொண்டு வந்தார். அன்னைக்கு அவர் மட்டும் இல்லை என்றால் தற்கொலை செய்து இருப்பேன் என்று மும்தாஜ் மனம் திறந்து பேசியுள்ளார்.