கார் விபத்தில் சிக்கிய பிரபல தமிழ் நடிகை அருந்ததி நாயர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மூன்று வாரமாக மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது சிகிச்சைக்கு  திரையுலகினர் நிதி உதவி அளிக்க வேண்டும் என்று குடும்பத்தினர் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளனர்.