அரியலூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. 3 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். வெற்றியூர் கிராமத்தில் நாட்டுப் பட்டாசுகளை தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் நாட்டு வெடி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், படுகாயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50000 வழங்க முதலமைச்சர்  முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.