அரசி, பருப்பு உள்ளிட்ட பல்வேறு மளிகை சாமான்களின் விலைகளும் வெகுவாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஆண்டு பெய்த கனமழையால் தமிழகத்தில் மளிகை சாமான்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் தமிழகம் அண்டை மாநிலங்களை நாடியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கும் வரத்து குறைந்துள்ளது. இதனால் அரிசி (26 கிலோ பை) ரூ.200 வரை உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் 1 கிலோ சீரகம் ரூ.480, சோம்பு ரூ.260, கடுகு ரூ.98 என விற்பனையாகிறது.