கர்நாடக மாநிலத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பு நிரப்ப வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக அரசு தொடக்கப் பள்ளிகளில் நடப்பு ஆண்டு மொத்தம் 27 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. நிரந்தர பணியாளர்களுக்கு தேர்வு நடத்தி அதன் மூலமாக நியமனம் செய்வதற்கான கால் அவகாசம் தற்போது இல்லை என்பதால் அரசு தொடக்கப் பள்ளிகளுக்கான 27 ஆயிரம் காலி பணியிடங்களை கௌரவ ஆசிரியர்கள் மூலம் நிரப்ப கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆசிரியர் நியமனம் குறித்த விவரங்களை வருகின்ற ஜூன் 10ஆம் தேதிக்குள் கல்வித் துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.