அசாம் மாநிலத்தில் பலதார திருமண முறை அதிகரித்து வரும் நிலையில் மக்கள் மத்தியில் தவறான நன்னடத்தை மற்றும் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கம் இதனால் ஏற்படுகின்றது. இதனை கருதி பலதார திருமணத்தை தடை செய்யும் நோக்கத்தில் அசாம் மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி அரசு ஊழியரின் மனைவி அல்லது கணவர் உயிருடன் இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ளக்கூடாது.

இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு அரசின்  அனுமதி கட்டாயம். இந்த புதிய விதிமுறை அனைத்து ஆண் மற்றும் பெண் அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விதியை மீறினால் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் ஊழியர் மீது அபராதம் மற்றும் பணிநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.