தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகல விலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து ஊழியர்களுக்கு அகலவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள். இந்த அகல விலைப்படி உயர்வாள் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2,366.82 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.