தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சி மற்றும் டி பிரிவில் பணியாற்றுபவர்களுக்கான மிகை ஊதியம் 3000 ரூபாய் வழங்கப்படும். மேலும் சி மற்றும் டி பிரிவை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாய் வழங்கப்படும். அதனைப் போலவே தொகுப்பூதியம், சிறப்பு காலம் வரை ஊதியம் பெறுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.