இந்தியாவில் எட்டாவது சம்பள கமிஷன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு இரண்டு முறை அகலவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் அகலவிலைப்படி நான்கு சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது அகலவிலைப்படி 42 சதவீதமாக உள்ள நிலையில் அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்கு பிறகு 50 சதவீதத்தை எட்டும் என கூறப்படுகிறது.

பொதுவாகவே ஏழாவது ஊதிய குழுவின் படி அகலவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டினால் புதிய ஊதிய குழுவை கொண்டு வர வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு பதிலளித்துள்ளது. அதாவது எட்டாவது ஊதிய குழு அமைப்பது தொடர்பாக எந்த முன்முடிவும் தற்போது தங்களிடம் இல்லை என்று நிதியமைச்சகம் தெளிவாக கூறியுள்ளது.