தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழகம் முழுவதும் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. என் நிலையில் இந்த திட்டம் தொடர்பாக சென்னையில் 3000 பொது மக்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு அதன் அறிக்கையை சென்னை மேயர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி 89 சதவீதம் பெண்கள் அரசு இலவச பேருந்துகளை மட்டும் நம்பி இருப்பதாகவும் அதில் 82 சதவீதம் பேர் இதன் மூலமாக தங்களுக்கு பெரும் அளவு பணம் மிச்சப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு பேருந்து பயணங்களின் போது பெண்களுக்கு ஏற்படும் இடையூறுகளை சமாளிக்கும் விதமாக அவசர கால பொத்தான்கள் பற்றிய விழிப்புணர்வை பெண் பயணிகளுக்கு ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.